தருமபுரி மேற்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் காரிமங்கலத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மேற்கு மாவட்ட தி.முக. செயலாளர் பி.பழனியப்பன் தலைமை தாங்கினர்.கூட்டத்திற்கு பின் செய்தியாளர்கள் சந்தித்திப்பில் அவர் கூறியதாவது. தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய நிதியை தராமல் ஒன்றிய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. குறிப்பாக 100 நாள் வேலை உறுதித் திட்டத்திற்கு தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய நிதி ரூ.4032 கோடி வழங்காமல் ஒன்றிய அரசு நிறுத்தி வைத்திருப்பது மிகவும் கண்டனத்துக்குரியது. லட்சக்கணக்கான பெண் தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக இருக்கும் இந்த தொகையை ஒன்றிய அரசு உடனே வழங்க வேண்டும். இதேபோன்று தமிழ்நாட்டில் இந்தியை திணிக்கும் நோக்கில் புதிய கல்விக் கொள்கையை உருவாக்கி தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய கல்வி நிதியும் தராமல் ஒன்றிய பிஜேபி அரசு வஞ்சித்து வருகிறது. நாடாளுமன்ற தொகுதி சீரமைப்பு தொடர்பாக கழகதலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கூட்டிய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் நாடாளுமன்ற தொகுதிகள் குறையாமல், எந்த பாதிப்பும் ஏற்படாமல் தொகுதி சீரமைப்பை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் இந்த திட்டத்தை 25 ஆண்டுகளுக்கு தள்ளி வைக்க வேண்டும். இதேபோன்று தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய நிதி பகிர்வில் பாரபட்சம் பார்ப்பதை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்று தெரிவித்தார்.



