மோரை ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் புதிய கன்னியம்மன் நகர் பி பிளாக் ஸ்ரீ தேவி கருமாரி அம்மன் கோவில் அருகில் நடைபெற்றது. இந்த கிராம சபை கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருளினை பற்றி விவாதித்தல்,
கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல்,
கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை,
சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல், இதர பொருட்கள் மேற் கண்ட பொருட்கள் சம்பந்தமாகவும் கிராம ஊராட்சியின் வளர்ச்சியின் அவசியத்தை கருத்தில் கொண்டு வளர்ச்சிக்காக கிராம மக்களால் கொண்டு வரப்படும் சிறப்பு தீர்மானங்களையும் ஆலோசித்து விவாதித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதால் அனைத்து தரப்பு பொதுமக்கள் அரசியல் கட்சி பிரமுகர்கள் பொது நலச் சங்க நிர்வாகிகள் வியாபார சங்க நிர்வாகிகள் அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் இளைஞர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழு அங்கத்தினர் வருகை தந்து கூட்டத்தை சிறப்பித்தனர், தனி அலுவலர் மோரை ஊராட்சி வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம் ஊராட்சி செயலாளர் மோரை ஊராட்சி நன்றி தெரிவித்தார்.



