மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்தில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் கலைச் சங்கம நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சிக்கு மயிலாடுதுறை கிராமிய கலை இலக்கிய மாவட்ட தலைவர் கிங் பைசல் வரவேற்பு ஆற்றினார். நிகழ்ச்சியில் தப்பாட்டம், தேவார பாடல்கள், பொம்மலாட்டம், சிவதான் டவம் ஆகிய காட்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு இயல் இசை நாடக மன்றத்தின் உறுப்பினர் கணநாதர் பொம்மை நாடக சபா உரிமையாளர் கலைமாமணி சோமசுந்தரம் நன்றி உரை ஆற்றினார். நிகழ்ச்சியில் சிவதாண்டவம், தேவார பாடல் நிகழ்ச்சிகள் பார்வையாளர்களின் மனதை வெகுவாக கவர்ந்தது



