சுசீந்திரம்.மார்ச்.26
மண்டைக்காடு அருகே நடுவூர்கரை அருள்மிகு சிவசக்தி திருக்கோவிலில் பங்குனி பெருந்திருவிழா கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில், இந்திய விண் வெளி ஆராய்ச்சி துறை தலைவர் டாக்டர் நாராயணன், மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி விக்டோரியா கவுரி, குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் உட்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், பக்தர்கள் செய்திருந்தனர்.



