நாகர்கோவில், ஜூலை 24 –
தமிழக அரசின் சார்பில் பொதுமக்களின் குறைகளை கேட்டு அவற்றிற்கு உடனடியாக தீர்வு காணும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் என்ற பெயரில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி நாகர்கோவில் மாநகராட்சியிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஏற்கனவே 2 நாட்கள் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது.
அதைத்தொடர்ந்து நேற்று முன் தினம் 3-வது நாளாக நாகர்கோவில் மாநகராட்சி 24, 25-வது வார்டுகளுக்கான “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் மீனாட்சிபுரத்தில் நேற்று முன் தினம் காலை தொடங்கியது. முகாமை மேயர் மகேஷ் நேரில் பார்வையிட்டார். நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா உட்பட பலர் கலந்து கொண்டனர்.



