கன்னியாகுமரி மார்ச் 24
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவர் டாக்டர் வி. நாராயணன், தனது சொந்த மாவட்டமான கன்னியாகுமரியில் அமைந்துள்ள பகவதி அம்மன் கோவிலில் வழிபாடு நடத்தினார்.
கன்னியாகுமரியின் தென்முனையில் அமைந்துள்ள பகவதி அம்மன் கோவில், இந்தியாவின் முக்கிய ஆன்மிகத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது.
இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்ற பிறகு, சந்திரயான்-4, ககன்யான் உள்ளிட்ட முக்கிய திட்டங்களை முன்னெடுக்கும் பொறுப்பை அவர் ஏற்றுள்ள நிலையில், இந்த ஆன்மிக நிகழ்வு அவரது பணிகளுக்கு ஆசியை வழங்கும் என பக்தர்கள் நம்புகின்றனர்.