நாகர்கோவில் மார்ச் 24
தமிழ்நாடு முஸ்லிம் ஜமாத் கூட்டமைப்பு மற்றும் கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாத் கூட்டமைப்பு சார்பாக குமரி மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிவாசல்களில் பணிபுரியும் ஆலிம்கள் மற்றும் முஅத்தீன்களுக்கு நோன்பு கிட்டு மற்றும் புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சி கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பு தலைவர் மீரான் மைதீன், தலைமையில் பொதுச் செயலாளர் முஜீப்ரஹ்மான், பொருளாளர் ஷேக் முகமது,தமிழ்நாடு முஸ்லீம் ஜமாஅத் கூட்டமைப்பின் கன்னியாகுமரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செய்னுல் ஆப்தீன் ஆகியோர் முன்னிலையில், நாகர்கோவில் கோட்டார் மாலிக் தினார் பள்ளி அருகில் உள்ள தமிழ்நாடு முஸ்லிம் ஜமாத் கூட்டமைப்பின் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. ஆலிம்களுக்கு புத்தாடைகள் மற்றும் நோன்பு கிட்டுகளை தமிழ்நாடு முஸ்லிம் ஜமாத் கூட்டமைப்பின் தலைவர் ஹிமாம் பாதுஷா வழங்கி துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாத் கூட்டமைப்பு ஆலோசனை கமிட்டி தலைவர் ஷேக் முஹம்மது.துணைச் செயலாளர்கள் அக்பர் ஆசிரியர் ,முகமது ரபீக்.மாவட்ட வர்த்தக நலப்பிரிவு செயலாளர் சகாப்தீன். பல்சமய நல்லிணக்க குழு துணைச் செயலாளர் முகமது அலி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் முஹம்மது நஜீப், பொருளாளர் லாயம் ஷேக் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.