ஈரோடு மார்ச் 22
கோடை வெயிலையொட்டி தமிழ்நாடு முழுவதும் நீர் மோர் பந்தல் அமைத்து பொது மக்களின் தாகத்தை தீர்க்க நீர்மோர் வழங்கும்படி முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டு இருந்தார் .
இதன்படி வீரப்பன் சத்திரம் பகுதி திமுக சார்பில் இன்று பகுதி திமுக அலுவலகம் முன்பு நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது .பகுதி செயலாளர் வி சி நடராஜன் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் நீர் மோர் வழங்கி தர் பூசணி பழங்களை வழங்கினார் .இந்த நிகழ்ச்சிக்கு மாநகர செயலாளர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்
வீரப்பன் சத்திரம் நகரசபை முன்னாள் தலைவரும் ஈரோடு மாநகராட்சி கவுன்சிலருமான மல்லிகா நடராஜன் வரவேற்றார் . மாவட்ட திமுக துணை செயலாளர் செந்தில்குமார் ,
வார்டு செயலாளர் சுப்பிரமணியம் , கோட்டை பகுதி செயலாளர் ராமச்சந்திரன், வார்டு செயலாளர்கள் நாகராஜன், மோகனசுந்தரம் தங்கமணி, பகுதி நிர்வாகிகள் அம்சத்பாட்சா, குமார் கல்யாணி , ராமசாமி வீமா ஜெயபாலன், ஜீவானந்தம் , தங்கவேல் ,ரவிக்குமார், வேல்முருகன், குணசேகரன் ,நந்தினி, மோகனசுந்தரம், தனலட்சுமி ,பரிமளா ராஜு ,சாந்தி, இளைஞர் அணி பிரபு, தினேஷ்குமார் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.



