மார்த்தாண்டம். மார் – 11
மார்த்தாண்டம் அருகே உள்ள வன்னியூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணா பிள்ளை. இவரது மனைவி சுகன்யா குமாரி (75). நேற்று இவர் மார்த்தாண்டத்தில் இருந்து களியக்காவிளைக்கு பஸ்ஸில் சென்று கொண்டிருந்தார். அவர் சென்ற பஸ்ஸில் கூட்டம் அதிகமாக இருந்தது.
அப்போது கூட்டத்தை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர் சுகன்யா குமாரி வைத்திருந்த பையை நைசாக திருடி விட்டு தப்பி சென்றுள்ளனர். அந்தப் பையில் ரூபாய் 85 ஆயிரம் மற்றும் வங்கி காசோலைகள் காணப்பட்டுள்ளன. இது குறித்து சுகன்யா குமாரி மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.