கிருஷ்ணகிரி, மார் – 8.
தமிழகத்தில் மும்மொழி கொள்கையை ஆதரித்து கையெழுத்து இயக்கம் தொடங்கபடும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார். அதன்படி தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது. கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் கிருஷ்ணகிரி ரவுண்டானா சாலையில் மாவட்ட தலைவர் கவியரசு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநில ST பிரிவு செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவபிரகாசம், சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டு கையெழுத்து இட்டு தொடங்கி வைத்தார். சாலையோர வியாபாரிகள், ஆட்டோ தொழிலாளர்கள்., பொது மக்கள் இடம் மும்மொழியின் அவசியம் குறித்து பொதுமக்களிடம் எடுத்துக் கூறி கையெழுத்து பெற்றனர்.
இந்நிகழ்ச்சியில் மாநில நெசவாளர் பிரிவு தலைவர் பாலமுருகன், முன்னாள் மாவட்ட தலைவர்கள் ஹரி கோட்டீஸ்வரன், சிவபிரகாஷ், மாவட்ட பொதுச் செயலாளர்கள் கே.கோவிந்தராஜ்., மாவட்டத் துணைத் தலைவர் எம். ஆர், ராஜேந்திரன், செந்தில், மாவட்ட செயலாளர் பி.சி.பூபதி,,மாவட்ட நெசவாளர் பிரிவு தலைவர் சஞ்சீவராஜ், நகர தலைவர் விமலா, மாவட்ட துணை தலைவர் ஜெயலஷ்மி., நிர்வாகிகள் கார்த்திக், கோபாலகிருஷ்ணன், மத்தூர் தாபா சிவா உள்பட மாநில, மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.



