கிருஷ்ணகிரி,மார்ச்.7-கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அடுத்த தொட்ட மஞ்சு அருகே கர கூர் கிராமத்தை ஒட்டிய காளிக் குட்டையை சேர்ந்த வர் மாதேஷ் (29). கூலித் தொழிலாளி. இவருக்கும் அருகில் உள்ள மற்றொரு கிராமத்தைச் சேர்ந்த உறவின ரான ஏழாம் வகுப்பு வரை படித்துள்ள 14 வயது சிறுமிக்கும் திருமணம் செய்ய இரு வீட்டார் முடிவு செய்தனர். இதில் சிறுமிக்கு
விருப்பமில்லை.
இதனால் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு சிறுமியை பெங்களூருக்கு அழைத்துச் சென்று கடந்த 3-ந் தேதி சிறுமியின் தாய் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. நேற்று முன்தினம் ஊருக்கு திரும்பி வந்த சிறுமி திருமணம் பிடிக்கவில்லை எனக் கூறி, தன் பாட்டியிடம் கூறி அழுது, கணவர் வீட்டுக்கு செல்ல மாட்டேன் எனக் கூறியுள்ளார்.
மாதேஷ் குடும்பத்தினர்
மற்றும் உறவினர்கள் சிறு மியை நேற்று முன் தினம் குண்டு கட்டாக வீட்டிற்கு தூக்கிச் சென்றனர். அழுத படி சிறுமியை அவர்கள் தூக்கி செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து சிறுமியின் பாட்டி தேன்க
னிக்கோட்டை அனைத்து மகளிர்காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதை அடுத்து காளிக்குட்டை கிரா மம் சென்ற போலீசார் சிறு மியை திருமணம் செய்த மாதேஷ், அவரது அண் ணன்மல்லேஷ் (35) மற்றும் சிறுமியின் தாய் நாகம்மா (29) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் சிறு மியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்து விசாரித்து வருகின்றனர்