குமரி மாவட்டம் நாகர்கோவில் 45 வது வார்டு திமுக சார்பில் முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு 45-வது வட்ட கழக திமுகவினர் சார்பில் கார்த்திகை வடலி அங்கன்வாடி மையத்தில் வைத்து நடைபெற்ற
நிகழ்வில் நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்ஸி லதா கலந்து கொண்டு அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி சிறப்பித்தார்.
மேலும் 45-வது வார்டு கழக உடன் பிறப்புகள் சார்பில் குக்கர் மற்றும் குழந்தைகளுக்கான இருக்கைகள் வழங்கப்பட்டது.
இதில் 45-வது வட்ட கழகத்தை சேர்ந்த சந்திரராஜன், கமலநாதன், ஜெயகுமார்,சுரேஷ், ஆறுமுகம், வைகுண்ட மணி, செந்தூர் ஜோதி, அருள்ராஜ், சிபன், பிரேம் ஆனந்த் கலந்து கொண்டனர்.