மதுரை மார்ச் 2,
மதுரையில் நடைபெற்ற தென் தமிழ்நாடு சுற்றுலா சங்கத்தின் 9வது ஆண்டு விழா கோலாகலம்
மதுரையில் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற தென் தமிழ்நாடு சுற்றுலா சங்கத்தின் 9வது ஆண்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் சங்கத்தின் தலைவர் குமார்
தலைமையிலான முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். செயலாளர் ராம்குமார் வரவேற்று நிகழ்வை தொடங்கினார். தமிழ்நாடு வனத்துறை அதிகாரி சந்திர காந்த் கெளரவ விருந்தினராக கலந்து கொண்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு
மற்றும் சுற்றுலா வளர்ச்சியில் அதன் முக்கியத்துவம் குறித்து சிறப்புரையாற்றினார்.மதுரை மாவட்ட சுற்றுலா அலுவலக அதிகாரி பாலமுருகன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, தமிழக சுற்றுலா துறையின் திட்டங்களை விளக்கினார். மாமதுரையர் அகில உலகத்தலைவர் திருமுருகன், நிறுவனர் ஜே. கே.முத்து,
செயலாளர் விஜயராகவன் ஆகியோர் முக்கிய உரை நிகழ்த்தி, மாமதுரை நகரின் வளர்ச்சி, தொழில்கள், வர்த்தக வள வளர்ச்சி மற்றும் வெளிநாட்டு முதலீடு போன்ற முக்கிய அம்சங்களை விவாதித்தனர். தொடர்ந்து திருமுருகன் கூறுகையில் மாமதுரை நகரின் மரபு, கலாசாரம், சுற்றுச்சூழல் மற்றும் வர்த்தக வளர்ச்சியை உலகளவில் அறிமுகப்படுத்த
தேவையான அனைத்து
நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார். மாமதுரையை தொழில் வாய்ப்புகள் அதிகம் உள்ள இடமாக மாற்றவும், தனி மனித தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் முக்கிய திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளதாக அறிவித்தார். வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க சுற்றுலா துறையுடன் இணைந்த தொழில்
மேம்பாட்டு பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் கூறினார். தமிழ்நாடு சுற்றுலா துறை, மாமதுரை அமைப்பு, தென்தமிழ்நாடு சுற்றுலா சங்கம் ஆகியவை இணைந்து, தமிழ்நாட்டில் முக்கிய சுற்றுலா மற்றும் வர்த்தக மையமாக உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
இண்டிகோ ஏர் சர்வீஸ் நிறுவனத்தின் தமிழ்நாடு முதுநிலை மேலாளர் சீனிவாசன் ஜெயசீலன், மதுரை உதவி மோனோஜர் டிரேட் சோல்ஸ் சந்திரசேகர் ஆயோருடன் முக்கிய ஆலோசனை நடைபெற்றது.
இந்நிகழ்வில், முனைவர் திருமுருகன் மற்றும் நிறுவனர் ஜே. கே. முத்து, தென் தமிழக சுற்றுலா சங்க தலைவர் குமார், செயலாளர் ராம்குமார், பொருளாளர் முகமது ஜக்காரியா ஆகியோர், மாமதுரைக்கு அதிக
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகளை இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை இண் டிகோ நிர்வாகத்திடம் முன் வைத்தனர். அதற்காக மார்ச் 20 ஆம் தேதி சென்னையில் இண்டிகோ உயர்மட்ட குழுவுடன் ஒரு ஆலோசனை கூட்டம் ஏற்பாடு செய்கின்றோம் அந்த
சந்திப்பில் மாமதுரைக்கு இண்டிகோ விமான சேவைக்கான பேச்சுவார்த்தை நடத்துவோம் அதன் பிறகு அரசுடன் பேசி இறுதி முடிவு எடுப்போம் என்று தெரிவித்தனர். இந்நிகழ்வின் நிறைவாக, பொருளாளர் நன்றியுரை நிகழ்த்தினார்.