தருமபுரி திராவிட முன்னேற்ற நகர கழக சார்பில் தமிழக முதலமைச்சரின் 72- வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நகர கழகச் செயலாளர் நாட்டான் மாது தலைமையில் அண்ணா சிலை அருகில் பட்டாசுகள் வெடித்தும்,கேக் வெட்டியும், நகர பேருந்து நிலையத்தில் ஆயிரம் பேருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. தருமபுரி நகர 15- வது வார்டு சார்பில் சௌந்தரராஜன் நகர மன்ற உறுப்பினர் ஏற்பாட்டில் நகர கழகச் செயலாளர் தலைமையில் 500 பேருக்கு அன்னதானமும், 300 பேருக்கு புடவைகளும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஐடிவி லிங்க் அம்பிகா, ஆறுமுகம், மனோகரன், சீனிவாசன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். 17 -வது வார்டு செயலாளர் ராஜா,சமயா ராஜா நகர மன்ற உறுப்பினர் ஆகியோர் ஏற்பாட்டில் நகர செயலாளர் தலைமையில் 300 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நகர கழகச் செயலாளர் நாட்டான் மாது, நகர மன்ற தலைவர் லட்சுமி நாட்டான்மாது, நகர துணைச் செயலாளர் முல்லை வேந்தன், ரஹீம் சிறுபான்மை அமைப்பு பிரிவு, ரவி, கனகராஜ்,பத்மா, சரவணன், சுருளிராஜன், வார்டு உறுப்பினர்கள் தங்கமணிமாது, ரவி, முருகன், சுப்ரமணி,ராஜி ,குமார், முன்ராஜ், தங்கராஜ் மற்றும் பொதுமக்கள் கலந்து உள்ளனர்.



