By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
சிவகங்கைமாவட்டம்

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

Last updated: March 2, 2025 4:23 pm
March 2, 2025 31 Views
Share
SHARE

சிவகங்கை: மார்ச்:01

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்                         விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர்  ஆஷா அஜித்,   தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர்  தெரிவிக்கையில், 

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் எண்ணற்ற திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி வேளாண் பெருங்குடி மக்களின் நலன் காத்து வருகிறார்கள். அதன்படி, விவசாயிகளின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிடும் பொருட்டும், வேளாண் தொழிலை உழவர்கள் எவ்வித இடையூறு இன்றியும் தேவையான அனைத்து வசதிகளுடன் மேற்கொள்ளும் பொருட்டும், பிரதி மாதந்தோறும் விவசாயிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம்  நடத்தப்பட்டு வருகிறது. 

 

அவ்வாறு, நடைபெற்று வரும் விவசாயிகள் குறைதீர்க்கும்                                    நாள் கூட்டத்தில், விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளின் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், புதிய கோரிக்கைகள் தொடர்பாகவும் எடுத்துரைக்கப்படுகிறது.

குறிப்பாக, சிவகங்கை மாவட்டத்தில் தேவையான நிலங்களில் தடுப்பணைகள் ஏற்படுத்தி, நிலத்தடி நீர் மட்டத்தினை பாதுகாத்திடவும், நீர் நிலையிலுள்ள ஆக்கிரமிப்புக்களை உடனடியாக அகற்றி பயன்பாட்டிற்கு கொண்டு    வரவும்,     கண்மாய்களை    தூர்வாரும்  பணிகள்   மேற்கொள்ளவும், 

விவசாய நிலங்களை வன விலங்குகள் சேதப்படுத்தாமல் பாதுகாத்திடவும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்திடவும், விவசாய பணிகளுக்கென இயந்திரங்கள் வழங்கிடவும், விவசாயிகளின் கோரிக்கைகளுக்கிணங்க, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நெல் அறுவடை இயந்திரம் விவசாயிகளிடமிருந்து கூடுதலாக வசூல் செய்யப்படுவதாக புகார் பெறப்பட்டால் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும்,விவசாயிகள் அரசின் திட்டங்களின் பயன்களை முழுமையாக பெற்றிடவும், தேவையான சான்றிதழ்களை வழங்கிடவும், துறை சார்ந்த அலுவலர்கள் வாயிலாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

மேலும், கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் முட்புதர்களை அகற்றி சுத்தம் செய்து உழவு செய்வதற்கு மானியம் வழங்கிடவும், நமது மாவட்டத்தில் இயற்கை முறையில் இடுபொருட்கள் உற்பத்தி செய்வதற்கு குன்றக்குடி வேளாண் அறிவியல் மையத்தில் பயிற்சி வழங்கி, இடுபொருள் உற்பத்தி செய்வதற்கு மானியம் வழங்கிடவும், தோட்டக்கலைப் பண்ணையில் தங்களுக்கு தேவையான மண்புழு உரம்  வழங்கிடவும்,  விவசாயிகளுக்கான மின் விநியோகங்களை சீரான முறையில் வழங்கிடவும், பயிர் காப்பீடு தொகை வழங்கிடவும், தேவையான உரங்களை இருப்பு வைத்திடவும், வங்கிகளின் மூலம் கடனுதவிகள் வழங்கி வேளாண் சார்ந்த புதிய தொழில் தொடங்கிட உறுதுணையாக இருந்திடவும், கடனுதவிக்குரிய மானியத்தொகையினை தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு வழங்கிடவும், குறிப்பாக இக்கூட்டத்தின் வாயிலாக விவசாயிகள் தெரிவிக்கப்பட்டுள்ள பல்வேறு கோரிக்கைகள் குறித்து அனைத்து  துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றி, அரசின் திட்டங்கள் விவசாயிகளுக்கு முழுமையாக சென்றடைவதை உறுதி செய்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர்  ஆஷா அஜித் தெரிவித்தார்.

 

 

அதனைத் தொடர்ந்து, விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக, சம்பந்தப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து, துறை சார்ந்த அலுவலர்கள் உரிய விபரங்களுடன் விரிவாக எடுத்துரைத்தனர்.

மேலும், பரிசீலனையிலுள்ள கோரிக்கைகள் மீது உடனடி தீர்வு காணும் பொருட்டு, உரிய களஆய்வுகளும்  மேற்கொண்டு, அந்நடவடிக்கைகள் குறித்த அறிக்கையினை சமர்ப்பிக்கும்படியும் மாவட்ட ஆட்சியர்  துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

முன்னதாக, விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தினை முன்னிட்டு, துறை ரீதியாக அமைக்கப்பட்டிருந்த செயல் விளக்க கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.

 

 

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.எஸ்.செல்வசுரபி அவர்கள், மாவட்ட வன அலுவலர்  பிரபா,   மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர்   கா.வானதி  இணைப் பதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்) இராஜேந்திர பிரசாத், இணை இயக்குநர் (வேளாண்மை) சுந்தரமகாலிங்கம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை)  தனலெட்சமி உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த முதன்மை அலுவலர்கள், விவசாயிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

You Might Also Like

பொதுமக்களின் மனுக்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க விழுப்புரம் ஆட்சியர் உத்தரவு

தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் மின்சார கார் தொழிற்சாலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

தஞ்சாவூரில் பள்ளி மாணவிகளுக்கு “கண்ணொளி காப்போம்” திட்ட பரிசோதனை; மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டார்

தஞ்சாவூரில் மக்கள் குறைதீர்க்கும் நாளில் 440 மனுக்கள்; உடனடி நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவு

தஞ்சாவூர் அருகே ஆடிப்பெருக்கு விழாவையொட்டி காவிரி படித்துறையில் பெண்கள் வழிபாடு

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
சிவகங்கைமாவட்டம்

புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை

December 10, 2024 27 Views
சொத்து வரி உயர்வுக்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
சாமிதோப்பு தலைமைப்பதியில் தை திருவிழா
நடப்பாண்டில் 468086 டன் கொள்முதல்
சுயாட்சி என்பது பிரச்சினைகளை மறைப்பதற்காக
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?