தஞ்சாவூர் மார்ச்.1
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒருங்கிணை ந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம் திறக்கப்பட்டது.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் “கலங்கரை ” என்னும் ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது இந்த மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
தஞ்சாவூரில் நடந்த நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை முதல்வர் டாக்டர் பாலாஜி நாதன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (கட்டிடங்கள்) நாகவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த மையத்தில் மனநல மருத்து வர் தலைமையில் ஆற்றுப்படுத்து நர், சமூகப் பணியாளர், செவிலியர், பாதுகாவலர் ,மருத்துமனை பணி யாளர், துப்புரவு பணியாளர் என 6 மனநல மருத்துவ பணியாளர்கள் பணியில் இருப்பார்கள்.
இங்கு தரமான சிகிச்சையும் வழங்கப் படும் .மேலும் அனைத்து மையங்களிலும் மூச்சுப் பயிற்சி, உடற்பயிற்சி,குடும்பத்தினருக்கான ஆலோசனைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் மறுவாழ்வு சேவைகள் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தனர்.