மதுரை பிப்ரவரி 28,
மதுரையில் தடை செய்யப்பட்ட எலி மருந்து விற்பனை – ஆட்சியர் அதிரடி நடவடிக்கை
மதுரை மாவட்டத்தில் உள்ள பூச்சி மருந்து விற்பனை நிலையங்கள், மளிகை கடைகளில் தடை செய்யப்பட்ட எலி கொல்லி மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறதா என வேளாண்மை அதிகாரிகள், தோட்டக்கலை அதிகாரிகள் ஒன்றிணைந்து தங்கள் வட்டாரங்களில் உள்ள பூச்சிக்கொல்லி மருந்து விற்பனை நிலையங்கள், மளிகை கடைகள், சிறிய அளவிலான பெட்டி கடைகள் என 67 இடங்களில் தீடீராய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது மளிகை கடைகளில் 1968 பூச்சிமருந்து சட்டத்திற்கு உட்படாத, தடை செய்யப்பட்ட எலி மருந்து (3% மஞ்சள் பாஸ்பரஸ்), வீட்டு உபயோகத்திற்கான இனத்தில் வராத ப்ரோமோ டையலான், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமுள்ள ஜிங் பாஸ்பைடு (2%) ஆகிய மருந்துகள் விற்பனை செய்தது கண்டறியப்பட்டு (91 கிலோ) பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், எலி கொல்லி மருந்துகளை விற்பனை செய்ய மத்திய பூச்சிக் கொல்லி வாரியத்தில் பதிவு செய்யப்பட்டு அதன் விபர படி உற்பத்தி செய்து விற்பனை செய்வதற்கு உரிமம் அவசியம். இருப்பினும் மளிகை கடைகள், மற்றும் பெட்டி கடைகளில் வீட்டு உபயோகத்திற்கு என்று குறிப்பிட்டுள்ள அளவுகளில் எலி மருந்துகளை விற்பனை செய்யலாம். அவ்வாறு விற்பனை செய்யப்படும் எலி மருந்துகள் 1968 பூச்சி மருந்து சட்டத்திற்குட்பட்டும். உரிய முறையில் பேக்கிங் செய்யப்பட்டு, வீட்டு உபயோகத்திற்கு என்ற பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.
பொதுமக்கள் வீடுகளில் எலிகளை கட்டுப்படுத்திட பூச்சிக் கொல்லி மருந்து விற்பனை நிலையங்கள் மற்றும் மளிகை கடைகள். பெட்டி கடைகளில் அனுமதிக்கப்பட்ட (1% ஜிங் பாஸ்பைடு) அளவிலான மருந்துகளா என்பதை கவனித்து வாங்கி உபயோகிக்க வேண்டும். எலி மருந்து விற்பனை தொடர்பாக தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் எனவும். விதி மீறல்களில் ஈடுபடும் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மீது 1968 பூச்சி மருந்து சட்டத்தின்படி கடும் நடவடிகை மேற்கொள்ளப்படும் என்று மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா தெரிவித்துள்ளார்