தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் தெற்கு மண்டல அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் முகாம் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரிய சாமி தலைமையில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வாரம் தோறும் மண்டல வாரியாக மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி
,சொத்து வரி, குடிநீர், பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்குதல், பெயர் மாற்றங்கள், பிறப்பு இறப்பு சான்றிதழ், திருத்தங்கள் குறித்து பொதுமக்கள் மனுகளை அளித்தனர். சில மனுக்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி ஆவணம் செய்தார், இந்நிகழ்ச்சியில் உதவி ஆணையர் கல்யாண சுந்தரம், இணை ஆணையர் சரவணகுமார், உதவி பொறியாளர் சரவணன்,நகர் அமைப்பு திட்ட செய்ன் பொறியாளர் ரெங்கநாதன் பொறியாளர் சேகர்,துணை மேயர் ஜெனிட்டா, மண்டல தலைவர் பாலகுருசாமி, மாமன்ற உறுப்பினர்கள் ராஜேந்திரன், முத்துமாரி, விஜயகுமார், சரவணகுமார், பச்சிராஜன், வைதேகி, முத்துவேல் மற்றும் வெற்றிசெல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



