கலசலிங்கம்பல்கலையில்
ஆங்கிலத் துறை சார்பில்
சர்வதேச மாநாடு !
பேராசிரியர்களுக்கு
விருதுகள் வழங்கல்!!
–+—
ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலையில் ஆங்கில துறை சர்வதேச மாநாடு நிறைவு விழா துணைத்தலைவர் முனைவர் எஸ் சசிஆனந்த்
தலைமையில் நடைபெற்றது.
மதுரை அமெரிக்கன் கல்லூரி பேராசிரியர் ஜே.ஜான்சேகருக்கு ஆங்கிலத்துறையில் சிறந்து பணியாற்றிய மைக்கு “சிறந்த சாதனையாளர் ” விருதை துணைத்தலைவர் வழங்கினார். மேலும் மாணவர்கள் ஆங்கில கற்பிக்கும் பணியில் சிறந்து விளங்கும் பல்வேறு கல்லூரி பேராசிரியர்கள் 25 பேருக்கும் ஸ்லேஸ் சிறந்த விருது கேடயம்,சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினார்.
டீன் வி.பாண்டிய
ராஜன் ,கேரளா நிர்மலா கல்லூரி பேராசிரியர் ஜாஸ்மின் ஜோஸ்,ஆராய்ச்சி துறை.இயக்குநர்.எம்.பி.பள்ளிகொண்ட ராஜசேகரன், துறைத் தலைவர் பி.ஆர்.அரவிந்த் முன்னிலை வகித்தனர்.
பேராசிரியர் வரவேற்புரை வழங்கிய பேராசிரியர் ஏ.ஹரிகரசுதன், இரண்டு நாள் மாநாடு அறிக்கையில், கஜகஸ்தான்,தத்துவ அறிவியல் நிபணர் குல்மிரா மாடியேவா ஆராய்ச்சிக்கட்டுரை உள்பட,அமெரிக்கா,இங்கிலாந்து,சவுதி அரேபியா,மலேசியா நாடுகளிலுருந்தும் நிபுணர்கள் கலந்து கொண்டு .200 க்கு மேற்பட்ட கட்டுரைகள் சமர்க்கிப்பட்டன என்று கூறினார்.
“தொடர்ந்து பேராசிரியர்களும் மாணவர்களும் வெளிநாட்டு நிபுணர்களுடனும் இணைந்து கூட்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டால்,பல்கலையும்,
சமுதாயதமும் முன்னேறும்” என்று கூறினார் துணைத் தலைவர்.
பேராசிரியர் இ.வி.ராம்குமார் சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார்.
பேராசிரியர் எஸ் ரமா தேவி நன்றி
கூறினார்.கலை மற்றும் சிறப்புக் கல்வி பள்ளி பேராசிரியர்கள்,அலுவலர்கள், மாணவர்கள் இணைந்து மாநாடு ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.