திருப்பத்தூர்: பிப்:22, திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி தெற்கு ஒன்றிய திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டமானது கந்திலி தெற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.கே. டி .அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது .கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் கழக தலைவர் அவர்களின் பிறந்தநாளினை சிறப்பாக கொண்டாடுவது என தீர்மானம் செய்து திமுக கழக கொடியினை ஏற்றியும் இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கியும், விளையாட்டுப் போட்டிகளை நடத்தியும், ஏழை எளிய பள்ளி மாணவர்களுக்கு உணவு உடை வழங்கியும், நலிந்த கழக முன்னோடிகளுக்கு ஒன்றிய சார்பாக இனி வருட வருடம் பண முடிப்பு தலா மூன்றாயிரம் அனைத்து கந்திலி தெற்கு ஒன்றிய 10 ஊராட்சிகளில் உள்ளவர்களுக்கும் வழங்கப்படும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மேலும் தேர்தல் பணியினை ஆரம்பித்து விட வேண்டும் எனவும் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தை கொடுக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில் திமுக கழக ஒன்றிய பொறுப்பாளர்கள், கிளை கழக செயலாளர்கள், தொண்டர்கள் என 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



