தென்காசி மாவட்டம் திருநெல்வேலி கோட்டம் அகில இந்திய காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க கண்டன ஆர்ப்பாட்டம்
அகில இந்திய காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம் தென்காசி கிளை சார்பில் ஒரு மணி நேர வேலை நிறுத்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது கண்டன ஆர்ப்பாட்டம் தென்காசி கிளை தலைவர் லட்சுமி நாராயணன் தலைமையில் நடைபெற்றது கிளைச் செயலாளர் பேச்சிமுத்து தலைமையில் கண்டன கோஷங்களை எழுப்பினார்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் முக்கிய கோரிக்கைகளாக புதிய பணி நியமனம் மற்றும் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்திற்கான அங்கீகாரத்தை உடனே வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் தென்காசி நகர citu தொழிற்சங்கத்தின் சார்பில் தென்காசி மாவட்ட தலைவர் கான் ,
Citu தென்காசி மாவட்ட செயலாளர் மணிகண்டன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள் கிளைப் பொறுப்பாளர் கோவிந்தன் நன்றி கூறினார் ஆர்ப்பாட்டத்தில் வடிவேலு ,அரிச்சந்திரன் ,பத்மநாபன், குமார் ,இசக்கியப்பன், இசக்கி ,தங்கபாண்டியன் ,ஆறுமுகம், சேதுராமலிங்கம் மற்றும் மகளிர் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்