கிருஷ்ணகிரி, ஜூலை 20 –
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளியில் விவசாயிகள் சங்கம் மற்றும் தொழிலாளர் சங்கமும் இணைந்து மேகதாது அணை கட்டுவதை மத்திய, தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி கைகளில் கருகிய பயிர்களுடன் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் தொழிலாளர் சங்கத்தின் மாநில தலைவர் தி.க. கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இத்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சின்னபையன்,
மாவட்டச் செயலாளர்களான ஜெயராமன், ரஹ்மத்துல்லாஹ், மாவட்ட பொருளாளர் நாகராஜ், மாவட்ட பொருளாளர் மஹாபூப் அலி ஆகியோர் முன்னிலை வகித்து மேகதாது அணை கட்டுவதினால் தமிழகம் சந்திக்கும் பாதிப்புள் குறித்து விளக்க உரை ஆற்றினர்.
மேலும் இந்த கண்டன ஆர்பாட்டத்தின் போது தமிழத்தினை வஞ்சிக்கும் விதமாக மேகதாது அணை கட்டுதை மத்திய அரசு தடை செய்ய வேண்டும், தென்பெண்ணை ஆற்றில் கெமிக்கல் மற்றும் கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும், தமிழக அரசின் தேர்தல் அறிக்கையின்படி தமிழக விவசாயிகள் பெற்ற கடன் முழுவதையும் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோசங்களை எழுப்பினார்கள்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில தலைவர் தி.க. கிருஷ்ணன் கர்நாடக அரசு மேகதாட்டில் அணை கட்டுவதால் தமிழத்தில் சுமார் 20 மாவட்டங்கள் தண்ணீர் இன்றி விவசாயம் பாதிக்கப்படும். இதனால் லட்சக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்படுவர். ஆகையால் மத்திய அரசு மேகதாட்டில் அணைக்கட்ட தடை விதிக்க வேண்டும் இல்லையில் தமிழக விவசாயிகளை ஒன்று திரட்டி மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்தார்.
அப்போது விவசாய சங்கத்தினை சேர்ந்த வாசு, இராமசந்திரன், ரெஜினா, குழந்தை, முனிகான், துரைசாமி, கிருஷ்ணன், ரயில்வே ராமசாமி, யுவராஜ், சதாம், பார்வதி, சுரேஷ், சிவசங்கர்,
வரமுனி உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.



