மார்த்தாண்டம், பிப்.18-
இந்து முன்னணி ஸ்தாபகர் தாணுலிங்க நாடார் 110-வது பிறந்தநாள் தினம் கொண்டாடப்பட்டது
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இந்து முன்னணி நிறுவனமான தாணுலிங்க நாடார் 110- வது பிறந்தநாள் தின விழாவை நேற்று தமிழக முழுவதும் இந்து அமைப்பினர் கொண்டாடினர்.
அதே போல குழித்துறை நகர இந்து முன்னணி சார்பில் குழித்துறை நகராட்சி அலுவலகம் முன்பு அவரது திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மேலும் இனிப்பு வழங்கி சிறப்பிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு குழித்துறை நகர இந்து முன்னணி தலைவர் வினுத்குமார் தலைமை தாங்கினார் .
நிகழ்ச்சியில் பொதுச் செயலாளார் விமல் ராஜ், பாஜக குழித்துறை நகர தலைவர் சுமன் ,மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் ராஜேஷ் பாபு உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.