சென்னை, ஆலப்பாக்கம், ராஜிவ் காந்தி நகர், செல்வ விநாயகர் கோவில் தெருவில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் அருள்மிகு செல்வ விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
அருள்மிகு செல்வ விநாயகர் ஆலய ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா காண வருகை புரிந்த பக்தர்கள் மீது புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டது இதனை தொடர்ந்து விநாயகருக்கு சிறப்பு அலங்காரம், செய்யப்பட்டு தீபாராதனை, பூஜைகள் நடைபெற்றது.
இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் காரப்பாக்கம் கணபதி கலந்து கொண்டு சிறப்பித்தார்.
தரிசனம் காண வருகை புரிந்த பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை ஆலய தலைவர் திமுக – மாவட்ட துணை அமைப்பாளர் டி.ராஜ்குமார் மற்றும் ஆலய நிர்வாகிகள், விழாக் குழுவினர் உட்பட கிராம பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
இந்த நிகழ்வில், அதிமுக திருவள்ளூர் மத்திய மாவட்டம், 146-வது தெற்கு வட்டச் செயலாளர் தென்றல் குமார், மாவட்ட துணை செயலாளர் வளசை எம்.ஆனந்தன், மத்திய மாவட்ட வர்த்தகர் அணி செயலாளர் எஞ்சினியர் துரைராஜ், மாவட்ட அவைத் தலைவர் பி.ராஜ், 146-வது வட்ட அவைத் தலைவர் ஜி.தீனதயாளன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் கே.ஞானசேகர், ஜி.வேலு, ஆர்.பாண்டியன், எம்.வெங்கடேஷ் உட்பட மற்றும் பலர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.