கிருஷ்ணகிரி பிப் 17
பிரபல வார இதழான ஆனந்த விகடன் பத்திரிக்கையில் 16.2.2025 தேதியிட்ட வார பத்திரிக்கையின் அட்டை படத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களை கைவிலங்குடன் கைது செய்து அமர வைத்துள்ளதாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
இது பாஜக தொண்டர்களின் மனதினை புண்படுத்தியதாக கூறி காவேரிப்பட்டினம் பேருந்து நிலையத்தில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பாஜக பொதுச்செயலாளர் கோவிந்தராஜ் தலைமையில் பாரதிய ஜனதா கட்சியினர், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்பாட்டத்தில், ஆனந்த விகடன் அட்டை படத்தை வைத்துக் கொண்டு கண்டனம் தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். இறுதியாக ஆனந்த விகடன் எழுத்தை கொண்ட பேப்பரை தீயிட்டுக் கொளுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த கண்டன ஆர்ப்பாட்ட நிகழ்ச்சியில், எல்.கோபாலகிருஷ்ணன், முன்னாள் மண்டல துணைத் தலைவர் எல்.சக்கரவர்த்தி, விவசாய அணி மாவட்ட செயலாளர் கே.பி.தீர்த்தம், முன்னாள் சிறுபான்மை மாவட்ட பொதுச் செயலாளர் அஸ்லாம், முன்னாள் மண்டல மகளிர் அணி தலைவி சி.சுமதிசக்கரவர்த்தி, முன்னாள் மண்டல மகளிர் அணி செயலாளர் நிலவழகி, கார்த்திகேயன், ராணுவ பிரிவு முன்னாள் தலைவர் சி.செல்வம், கே.பெரியசாமி, ராஜேந்திரன், வேப்பனப்பள்ளி ஜெய் கிருஷ்ணன், உள்ளிட்ட ஏராளமான பாஜகவினர் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். பின்னர் ஆனந்த விகடன் புத்தக ஆசிரியர், மற்றும் வெளியீட்டாளர், மீது வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, காவேரிப்பட்டினம் உதவி காவல் ஆய்வாளர் சிவசந்தரிடம் புகார் மனுவினை அளித்தனர்.