கிருஷ்ணகிரியில் மக்களுடன் முதல்வர் மூன்றாம் கட்ட திட்ட முகாம்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஊராட்சி ஒன்றியம், குட்டூர், பட்லப்பள்ளி, சிகரலப்பள்ளி, பெலவர்த்தி மற்றும் ஜெகதேவி ஆகிய ஊராட்சிகளில், “மக்களுடன் முதல்வர்” மூன்றாம் கட்ட திட்ட முகாம்களை மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார், பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன் ஆகியோர் முன்னிலையில் (12.02.2025) அன்று துவக்கி வைத்து, துறை வாரியாக அரங்குகள் அமைத்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்று கணினியில் பதிவேற்றம் செய்யும் பணிகளை பார்வையிட்டார்.
மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் அவர்கள் தெரிவித்ததாவது:
பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குட்டூர், பட்லப்பள்ளி, சிகரலப்பள்ளி, பெலவர்த்தி மற்றும் ஜெகதேவி ஆகிய ஊராட்சிகளில், “மக்களுடன் முதல்வர்” மூன்றாம் கட்ட திட்ட முகாமில் 961 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 56 இலட்சத்து 48 ஆயிரத்து 468 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கியதாகவும்.
ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலையில் உள்ள ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை “மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம்களில் வழங்கலாம். இம்முகாம்களில் பெறப்படும் மனுக்களுக்கு 30 நாட்களில் தீர்வு காணப்படும் எனவும் தெரிவித்தார்.
முதல் மற்றும் இரண்டாம் கட்ட முகாம்களில் பெறப்பட்ட 36,313 மனுக்களில் அனைத்து மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் அ.சாதனைக்குறள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் க.கவிதா, கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் நா.ஷாஜகான், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சி.பன்னீர்செல்வம், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சங்கர், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் சி.பச்சையப்பன், தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் மா.இந்திரா, கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் மரு.இளங்கோவன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) மகாதேவன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் எஸ்.பிரசன்ன பாலமுருகன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கௌரிசங்கர், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர்கள் ஜெய்சங்கர், மாதேஸ்வரன், தமிழ்நாடு மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் செல்வகுமார், வட்டாட்சியர் பொன்னாலா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில், முருகன், ஒன்றிய செயலாளர்கள் அறிஞர், ராஜேந்திரன், மூன்றம்பட்டி குமரேசன், ரஜினி செல்வம், நரசிம்மன், வசந்தரசு,
மற்றும் முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.



