கோவை பிப்:14
தைப்பூசம் திருவிழாவை முன்னிட்டு கோவை மருதமலை அடி வாரத்தில் பிரசித்திபெற்ற அருள்மிகு வள்ளி அம்மன் திருக்கோவிலில் வள்ளியம்மன் அறக்கட்டளை நிறுவனர் அன்பு (எ) செந்தில் பிரபு தலைமையில் நடைபெற்றது.
வள்ளியம்மன் திருக்கோவிலில் வள்ளியம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன. பின்னர் வள்ளியம்மன் திருக்கல்யாணம் உற்சவம் திருவீதி உலா மேளதாளம் மற்றும் ஜமாப் இசையுடன் நடைபெற்றது.
உற்சவ திருவீதி உலா வள்ளியம்மன் திருக்கோவிலில் இருந்து புறப்பட்டு சுப்பிரமணிய சுவாமி அடிவாரம் சென்று மீண்டும் கோவிலை சென்றடைந்தது திருவீதி உலா நிகழ்ச்சியில் பக்தர்கள் அப்பகுதி பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து அருள் பெற்றனர்.
அதனைத்தொடர்ந்து மாபெரும் அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியினை வள்ளியம்மன் அறக்கட்டளை நிறுவனர் அன்பு எ செந்தில் பிரபு துவக்கி வைத்தார். உடன் செளமியா செந்தில் பிரபு மற்றும் கோவில் நிர்வாகிகள் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து அருள் பெற்றனர்.
இந்த ஊர் வலத்தில் கோவை புறநகர் தெற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செய லாளர் ஈ. ஆர்.சந்திரசேகர் மற்றும் கோவை மாநகர் மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை இணைச் செயலாளர் கோவை மாநகராட்சி 38வது வார்டு மாமன்ற உறுப்பினர் சர்மிளா சந்திரசேகர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் நிகழ்ச்சியை தொடர்ந்து பூஜையில் கலந்து கொண்ட சுமார் 1000 பக்தகோடி பெருமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.