ஈரோடு மே 20
கர்நாடக மாநில எல்லை வழியாக ஈரோடு மாவட்டத்திற்குள் மாவோயிஸ்டுகள் ஊடுருவ வாய்ப்பு உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது இதையொட்டி ஈரோடு மாவட்ட நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த ஒரு மாதமாக மலை பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் அவர்கள் ஒவ்வொரு கிராமமாக சென்று மக்களை சந்தித்து விசாரணை நடத்தி வருகின்றனர் மலைப்பகுதியில் புதிய நபர்களின் நடமாட்டம் உள்ளதா என்று விசாரிக்கும் போலீசார் புதிய நபர்களின் நடமாட்டம் இருந்தால் உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்கும்படியும் கேட்டுக் கொண்டனர்
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வனப்பகுதியில் உள்ள கர்கே கண்டியிலிருந்து பாலாறு வரை சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் 13 பேர் குழு கொண்ட நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் அடர்ந்த வனப்பகுதியில் நடந்தே சென்று தீவிர தேர்தல் வேட்டையில் ஈடுபட்டனர் இதேபோல ஒவ்வொரு மலை கிராமமாக சென்று தீவிர தேடுதல் வேட்டை தொடரும் என்று போலீசார் தெரிவித்தனர்.