கிருஷ்ணகிரி, மே 7 –
தமிழகத்தில் கடத்த 4ம் தேதி நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை முடிவில் தமிழக வெற்றிக் கழகம் தனி மெசாரிட்டியுடன் 108 இடங்களில் வெற்றிப்பெற்றது. இதனை அடுத்து தமிழகத்தில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி தனது ஆதரவை தெரிவித்துள்ளதை அடுத்து தமிழகம் முழுவதும் உள்ள தவெக கட்சியினர் பட்டாசு வெடித்தும் பொது இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணத்தில் உள்ள தவெக கட்சியினர் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவரும், மிட்டஹள்ளி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினருமான
எல்.சுப்பிரமணியனை நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து தங்களது வாழ்த்தினை தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து காவேரிப்பட்டினம் பேருத்து நிலையம் அருகில் முள்ளாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் எல்.சுப்பிரமணியன் முன்னிலையில் தவெக கட்சியினர் தமிழகத்தில் தவெக கட்சி தலைவர் விஐய் முதல்வராக பதவி ஏற்க காங்கிரஸ் கட்சி தனது ஆதரவிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பட்டாசு வெடித்தும் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி உற்சாகமாகக் கொண்டாடினர். அப்போது காவேரிப்பட்டினம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த தவெக கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.



