நாகர்கோவில் பிப் 10
கன்னியாகுமரி மாவட்டம் மேல சூரங்குடி அரசு உயர் நிலை பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. இந்த ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்துகொண்டு இறுதி ஆண்டு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். பள்ளி மேலாண்மை குழு சார்பில் பள்ளிக்கு புதிய வகுப்பறைகள் கட்ட மனு அளித்தனர்.
விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
முன்னதாக பள்ளிக்கு வருகை தந்த விஜய்வசந்தை காங்கிரஸ் நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்றனர். பின்பு பள்ளி நிர்வாகம் சார்பில் சால்வை அணிவித்து பேண்ட் வாத்தியம் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாநகர துணை மேயர் மேரி பிரின்ஸி, நாகர்கோவில் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் நவீன்குமார், தலைமை ஆசிரியர் ஞானவேலன், தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர் மேரி ஜான்சி, ஊர் தலைவர் ஜீவா, முன்னாள் மாணவர் சங்க தலைவர் சுபாஷ், மற்றும் ராஜாராம், சந்திரராஜன், கணேசன், லிலா, ராஜசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



