புதுக்கடை, பிப்- 9
புதுக்கடை அருகே காப்புக்காடு பகுதி தாழவிளை என்ற இடத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் மனைவி மலர் விழி (47). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஹென்றி மனைவி வசந்தா, சிவகுமார் மனைவி தமிழரசி ஆகியோருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் சம்மந்தமாக முன்விரோதம் இருந்தது. சம்பவ தினம் மலர்விழி பணத்தை வசந்தாவிடம் கேட்டுள்ளார். அப்போது வசந்தா, தமிழரசி சேர்ந்து மலர் விழியை தாக்கி உள்ளனர். இது தொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வசந்தா, தமிழரசி மீது வழக்கு பதிவு செய்தனர்.