கருங்கல், பிப்.9
கருங்கல் அருகே உள்ள ஒரு பகுதியை சேர்ந்தவர் ஷாஜினி ( 27). எம் சி ஏ பட்டதாரி. சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த ஷாஜினி திடீரென மாயமானார். வெளியே சென்றிருந்த அவரது பெற்றோர் மகளை காணாமல் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து உடனடியாக கருங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில்:- ஷாஜினி பெங்களூரை சேர்ந்த டேனியல் என்பவருடன் இன்ஸ்டாகிராமில் பழகி வந்ததாகவும், ஆற்றூர் பகுதியை சேர்ந்த கேத்தரின் என்பவர் உதவி செய்ததாகவும் கூறியுள்ளனர். கடந்த அக்டோபர் மாதம் ஷாலினி பெங்களூரில் உள்ள டேனியல் வீட்டிற்கு சென்று விட்டு திரும்பி வந்ததாகவும் புகாரில் தெரிவித்துள்ளனர்.
அதன்படி தற்போதும் ஷாஜினி பெங்களூர் தான் சென்றாரா? அல்லது வேறு எங்காவது சென்றார் என்பது தெரியவில்லை. வீட்டிலிருந்து செல்லும்போது அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் நான் சாகப் போகிறேன், என்னை தேட சொல்லாதீர்கள் என கூறிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.
இது குறித்து கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.