நாகர்கோவில் பிப் 9
குமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் மைதானத்தில் டாக்டர் ஜெயசேகரன் மெடிக்கல் டிரஸ்ட், டாக்டர். ஜெயசேகரன் கல்லூரி, நர்சிங் பள்ளி ஆகியவை சார்பில்
வருடாந்திர விளையாட்டு போட்டி நடைப்பெற்றது.
இதில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளை தேசிய அளவில் உயரம் தாண்டுதலில் தொடர்ந்து மூன்று முறை தங்கம் வென்றவரும், சர்வதேச அளவில் வெள்ளி பதக்கம் வென்றவருமான தேசிய சாம்பியன் டாக்டர்.ஆறுமுகம்பிள்ளை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
மேலும் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.
இந்நிகழ்வில் இன்ஜினியர் டிக்சன், ஜெயசீலன், மாநில துணை தலைவர், தமிழ்நாடு முதுநிலை தடகள சங்கம், விணு, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ஆகியோர் கௌரவ விருந்தினராக பங்கேற்று சிறப்பு உரை வழங்கினர்.
இறுதியாக தேசிய கீதம் ஒலிக்க விழா சிறப்பான முறையில் நிறைவடைந்தது.



