ஈரோடு பிப் 9
ஈரோடு பெரியார் நகரை சேர்ந்தவர் நாவலன் .
டூ கோஜுகான் கராத்தே அசோசியேஷன் மாநிலத் தலைவராக உள்ள இவர் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்துள்ளார் அதில் கூறி இருப்பதாவது
நான் முறைப்படி கராத்தே கற்றுக்கொண்டு 6வது டேன் வரையில் பட்டயம் சான்றிதழ் பெற்றுள்ளேன் நான் கற்ற தற்காப்பு கலையை அனைத்து மாவட்டங்களிலும் பயிற்சி பள்ளி வைத்து மற்றவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறேன் எங்களது அகில இந்திய தலைமை பயிற்சியாளர் கேரளாவை சேர்ந்த உலக கராத்தே சம்மேளனத்தின் ரெப்ரி மது விஸ்வநாத் தலைமையில் கராத்தே பயிற்சி பள்ளியில் ஒவ்வொரு வருடமும் போட்டிகளில் தேர்வு பெறும் கராத்தே பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழும் பட்டயமும் வழங்கி வருகிறோம்.
இந்த பயிற்சி பள்ளிக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு கராத்தே மாஸ்டர்கள் ஈன்று சொல்லி கொள்ளும் 3 பேர் செயல்படுகிறார்கள். மேலும் நாங்கள் நடத்தும் விழாவில் அவர்களது பெயர்களை இணைத்து தான் நடத்த வேண்டும் என்று மிரட்டுகின்றனர். மேலும் தமிழக பயிற்சியாளரான எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்கள்.மேலும் அகில இந்திய தலைமை பயிற்சியாளர் மது விஸ்வநாத் பணம் பெற்றுக் கொண்டு 2 வது டன் மீது பிளாக் பெல்ட் வழங்கியதாக பொய்யான குற்றச்சாட்டை கூறி அவரது பெயருக்கு களங்கம் கற்பித்து உள்ளனர். போலீசாரின் விசாரணையில் அது உண்மையில்லை என்று தெரிய வந்துள்ளது. எனவே
முன்விரோதம் காரணமாக எங்களை கொச்சைப்படுத்தி தவறாக சித்தரித்து எங்களிடம் பணம் பறிக்கும் நோக்கத்துடன் கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.