ஈரோடு பிப் 2
ஈரோடு மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக 237 வாக்குச்சாவடிகளை கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள எல்.ஐ.சி, இரயில்வே அலுவலர்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கி அலுவலர்கள் மற்றும் இதர ஒன்றிய அரசு பணியாளர்கள் தேர்தல் நுண்பார்வையாளர்களுக்கான பயிற்சி தேர்தல் பொது பார்வையாளர் அஜய் குமார் குப்தா முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தால் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்-2025 அறிவிக்கப்பட்டவுடன் அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்களை கண்காணிப்பதற்காக பொதுப் பார்வையாளர், காவல் பார்வையாளர் மற்றும் செலவின பார்வையாளர்கள் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் 237 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளது. வாக்குப்பதிவு நாள் அன்று வாக்குச்சாவடிகளை கண்காணிக்க எல்.ஐ.சி, இரயில்வே அலுவலர்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கி அலுவலர்கள் மற்றும் இதர ஒன்றிய அரசு பணியாளர்கள் என 20 சதவீதம் ரிசர்வ் உட்பட 284 தேர்தல் நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து இன்றைய தினம் 284 தேர்தல் நுண்பார்வையாளர்களுக்கான பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியில் நுண்பார்வையாளர்கள் வாக்குப்பதிவு நாளன்று மேற்கொள்ளப்பட வேண்டிய அனைத்து முன்னேற்பாடு பணிகள் குறித்தும், மேலும் விதிமீறல்கள் நடைபெறும்பட்சத்தில் தேர்தல் பொது பார்வையாளருக்கு உடனடியாக தகவல் தெரிவிப்பது குறித்தும் பயிற்சி வழங்கப்பட்டது. தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கை நாளான 8 ந் தேதி அன்று வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள 17 கண்காணிப்பாளர்கள், 17 உதவியாளர்கள் மற்றும் 17 நுண் பார்வையாளர்கள் என 51 அலுவலர்களுக்கு வாக்கு எண்ணும் நாளன்று மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் பயிற்சி நடைபெற்றது. இந்நிகழ்வின் போது ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் ஈரோடு மாநகராட்சி ஆணையர் ஸ்ரீகாந்த் உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



