புதுக்கடை, ஜன- 28
புதுக்கடை அருகே தேங்காப் பட்டணம் பகுதியை சேர்ந்தவர் ஷாகுல் ஹமீது (25). இவருக்கு திருமணம் ஆகி மனைவி பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் இவர் இன்ஸ்டாகிராம் மூலம் திருச்சியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கத்தின் காரணமாக ஷாகுல் அமீது திருச்சி சென்று அந்தப் பெண்ணை அங்கிருந்து தேங்காப்பட்டணத்திற்கு கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு அழைத்து வந்துள்ளார். அந்த பொண்ணும் திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளது. ஆனால் கணவரை பிரிந்து வாழ்வதாக தெரிய வருகிறது.
இதற்கு இடையில் தேங்காப்பட்டணம் ஊருக்குள் அந்தப் பெண்ணை கொண்டு வந்தவுடன் ஊர் மக்களுக்கு இந்த சம்பவம் தெரிய வந்து. உடன் அங்கு எதிர்ப்பு கிளம்பியது. உடனடியாக ஊர்மக்கள் சார்பில் புதுக்கடை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. புதுக்கடை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தி, திருச்சியில் உள்ள பெண்ணின் தந்தையிடம் தொடர்பு கொண்டு பேசினர். அப்போது கடந்த சுமார் நான்கு நாட்களுக்கு முன்பு மகள் மாயமானதாகவும் அவரை காணவில்லை என்று பெண்ணின் தந்தை போலீசாரிடம் தெரிவித்தனர்.
இதை அடுத்து பெண்ணின் தந்தை மற்றும் உறவினர்கள் நேற்று முன்தினம் இரவு புதுக்கடை போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜானகி தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, திருச்சி பெண்ணை தந்தையுடன் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஷாகுல் அமீது ஏற்கனவே பல குற்றப் பின்னணி உடையவர். அவர் மீது புதுக்கடை போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவாகி உள்ளது.



