தளவாய் அருகே மணல் கடத்து முயற்சியில் ஈடுபட்ட இரு நபர்கள் மீது குண்டத் தடுப்புச் சட்டம் பாய்ந்தது
அரியலூர்,அக்;02
அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம் நாகல்குழி நடுத்தெருவைச் சேர்ந்த கொளஞ்சியப்பன் மகன் வினோத் (எ) பில்லா (25/24) மற்றும் வீராக்கன் கிழக்குத் தெருவைச் சேர்ந்த சண்முகம் மகன் சரண் (19/24) என்பவர்கள் மீது மணல் கடத்தல் வழக்குகள் உள்ளன.
15.09.2024-ம் தேதி அதிகாலையில் இவரும் இவரது கூட்டாளிகளும் வெள்ளாற்றில் மணல் திருட்டில் ஈடுபடுவதற்காக டாடா ஏசி வாகனம் வண்டியில் சென்றபோது சன்னாசிநல்லூர் அருகே பணியிலிருந்த தளவாய் காவல் நிலைய முதல் நிலைக் காவலர் தமிழரசன் மற்றும் ஊர்காவல்படையைச் சேர்ந்த வெங்கடேசன் ஆகியோர் சோதனை செய்வதற்காக வண்டியை நிறுத்திய போது அவர்கள் மீது தாங்கள் வந்த டாடா ஏசி வண்டியை மோதி கொலைமுயற்சியில் ஈடுபட்டு தப்பியுள்ளனர். இது தொடர்பாக தளவாய் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, எதிரிகள் மூவர் கைது செய்யப்பட்டு திருச்சிராப்பள்ளி மத்திய சிறையில் அடைக்கப் பட்டிருந்தனர். இந்நிலையில் மேற்குறிப்பிட்ட இருவர் மீது மீது குண்டர் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கக்கோரி குவாகம் காவல் வட்ட ஆய்வாளர் மணிவண்ணன் கோரியதன் அடிப்படையில், அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ் அவர்களின் மேல்பரிந்துரையின்படி, அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பொ.இரத்தினசமி, எதிரிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் படி தடுப்புக்காவலில் அடைக்க ஆணை பிறப்பித்தார், அதன் அடிப்படையில் நேற்று 30.09.2024-ந் தேதி திருச்சி மத்திய சிறைத்துறை அதிகாரிகளிடம் அதற்கான ஆணை பிரதிகள் வழங்கப்பட்டது.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்



