நாகர்கோவில் ஜன 26
குமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :-
கோழிக்கழிச்சல் பெருமளவில் கோழிகளில் இறப்பை ஏற்படுத்தும் நச்சுயிரியால் பரப்பப்படும் ஒரு கொடிய நோய் ஆகும். இந்நோய் ஒரு கோழியை தாக்கும்போது அது வேகமாக மற்ற கோழிகளுக்கும் பரவி மிகுந்த பொருளாதார இழப்பை ஏற்படுத்தும். இந்நோயைத் தடுப்பதற்காக கன்னியாகுமரி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் நடைபெறும். இவ்வாண்டு கோழிக்கழிச்சல் நோய் இருவார தடுப்பூசி முகாம் 01.02.2025 முதல் 14.02.2025 வரை நடத்தப்படவுள்ளது.
நமது மாவட்டத்திற்கு குறியீடாக 1,50,000 தடுப்பூசிகள் டோஸஸ் நிர்ணயம் செய்யப்பட்டு கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி மருந்து பெறப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை நிலையங்களுக்கும் மேற்படி தடுப்பூசி மருந்து பிரித்து வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது அருகாமையில் இயங்கி வரும் கால்நடை மருந்தகம் மற்றும் கால்நடை நிலையங்களை அணுகி தாங்கள் வளர்க்கும் கோழிகளுக்கு கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி போட்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.