தேனி.ஜன.21-
தேனி மாவட்டம்
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 24.01.2025 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்
தேனி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 24.01.2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 11.00 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில், வேளாண்மை மற்றும் சகோதரத்துறையால் சமீபத்திய வேளாண்மை தொழில்நுட்பங்கள் குறித்து எடுத்துரைக்கப்படவுள்ளது எனவே, தேனி மாவட்டத்தைச் சார்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் அந்தந்த வட்டாரத்தில் உள்ள வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைகள் சம்பந்தமான திட்டங்கள் குறித்த கோரிக்கைகளை விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் மனுக்களாக வழங்கலாம்.
விவசாயிகளிடமிருந்து பெறப்படும் மனுக்கள், அலுவலர்களுக்கு அனுப்பி, அதன்மீது தனி கவனம் செலுத்தி சம்மந்தப்பட்ட துறை உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பயனடையலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.
வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், தேனி.