மதுரை ஜனவரி 9,
மதுரை மாநகர் காவல் தெற்கு துணை ஆணையராக அ.ஞா. இனிகோ திவ்யன் புதிதாக பொறுப்பேற்று கொண்டார். புதிதாக பொறுப்பேற்று கொண்ட துணை ஆணையர் சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம் ஆகும், இவர் BE படித்து கடந்த 02.08.2013-ல் TNPSC Group- I மூலமாக தேர்வாகி தமிழ் நாடு காவல்பணியில் சேர்ந்தவராவார்.
இவர் ஏற்கனவே மதுரை மண்டலத்தில் குடிமைப் பொருள் குற்ற புலனாய்வு துறையில் காவல் கண்காணிப்பாளராக பணி புரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மதுரை மாநகர் காவல் தெற்கு மாவட்ட துணை ஆணையராக பொறுப்பேற்று உள்ளார்கள்.