By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பள்ளிகளில் சூழல் குறித்த விழிப்புணர்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > பள்ளிகளில் சூழல் குறித்த விழிப்புணர்வு
மாவட்டம்

பள்ளிகளில் சூழல் குறித்த விழிப்புணர்வு

Last updated: January 8, 2025 2:31 pm
January 8, 2025 17 Views
Share
SHARE

ஊட்டி. ஜன. 08.

கோத்தகிரி நகரில் அமைந்துள்ள சிஎஸ்ஐ  மேல்நிலைப் பள்ளியில்  தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக சுற்றுச்சூழல் மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை  திருமதி ஜெப்ரி ப்ரீத்தா  தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் வழக்குரைஞர் உதயகுமார் முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில கருத்தாளர்  கே ஜே ராஜு அவர்கள்  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு  பேசியபோது கூறிய கருத்துக்களாவன- 

 காலநிலை மாற்றத்திற்கு காரணமான அமெரிக்கா சீனா மற்றும் 27 ஐரோப்பிய நாடுகள் போன்ற வளர்ந்த நாடுகள் தான் பசுமைக் குடில் வாயுக்களை அதிகமாக வெளியேற்றுபவை.  அண்மையில் நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் மகாநாட்டில் வளர்ந்த நாடுகள் தாங்கள் வெளியேற்றும் கார்பன் டை ஆக்சைடுக்கு  அளவாக  அவற்றை ஈர்க்கும் காடுகளை உருவாக்கும் வகையில் இந்தியா போன்ற வளர்ந்து வரும் மற்றும் ஏழை நாடுகளுக்கு நிதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அமெரிக்க அதிபராக வரப்போகும்  டிரம்ப்  காலநிலை மாற்றம் என்பதே  ஒரு போலி அறிவியல்  என்று கூறி நிதி வழங்க மறுத்து விட்ட நிலையில் ஏனைய ஐரோப்பிய நாடுகளும் பின் வாங்குவது உலகளாவிய  காலநிலை மாற்ற தடுப்பு முயற்சிக்கு ஒரு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. கடந்த  ஆண்டு வெளியேற்றப்பட்ட கார்பன் டை ஆக்சைடில் 31 சதவீதம் சீனாவும்  13 சதவீதம்  அமெரிக்காவும் 12 சதவீதம் 27 ஐரோப்பிய நாடுகளும் மீதமுள்ள 41% ஏனைய ஏழை நாடுகளால் வெளியேற்றப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு தகவல்  வெளியிட்டுள்ளது. மேலும் காலநிலை மாற்றத்தின் தீவிரத் தன்மை  உலகெங்கிலும் துவங்கி விட்டது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தால் மனித குலம் அழிவிற்கு  சுனாமி போன்ற பெரிய பேரிடர்கள்  மட்டுமல்ல வைரஸ்கள் பாக்டீரியாக்கள் போன்ற சிறு பூச்சிகள் கூட கடுமையான தொற்று நோய்களை பரப்பி மனித குலத்தை அழிக்கும் வல்லமை உடையவை எனவும் கூறியுள்ளது. உலகில் ஒவ்வொரு ஆண்டும் 400 மில்லியன் டன் அளவிற்கு பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவற்றில் 80 சதவீதம்  ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி  குப்பையாக வீசி எறியப்படுபவை. பூமி மட்டும் அல்ல கடல் பரப்பிலும் 40% இடத்தை   இத்தகைய குப்பை பிளாஸ்டிக்குகள் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. இத்தகைய மக்காத பிளாஸ்டிக்குகள் சூரிய வெப்பத்தால் மைக்ரோ பிளாஸ்டிக்களாக மாறி கடல் வாழ் உயிரினங்களில் மட்டுமல்ல மனித தாய்ப்பாலிலும் கலந்துள்ளது குறிப்பிடத்தக்கது என்பன போன்ற பல சுற்றுச்சூழல் கருத்துக்களை  ஆசிரியர் ராஜூ கூறினார். முன்னதாக தேசிய பசுமை படைத்திட்ட  அலுவலர் ஆசிரியர் சுப்ரமணி அனைவரையும் வரவேற்றார். ஆசிரியை பிலோமினா நன்றி கூறினார்.

You Might Also Like

காட்டு பரமக்குடி ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவில் முளைப்பாரி திருவிழா

திருப்பூரில் உங்களுடன் ஸ்டாலின்

நாகர்கோவிலில் கிங்டம் பட போஸ்டரை கிழித்தெறிந்த நாம் தமிழர் கட்சியினர்

குமரியை சேர்ந்த சிறுமியை கர்ப்பம் ஆக்கிய சிறுவன் கைது; மகனை போலீசில் ஒப்படைத்த தாய்

தமிழக மீனவர்களுக்கு உடனடியாக லைப் ஜாக்கெட் வழங்க வேண்டும்; அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார் வலியுறுத்தல்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை சிலையை நிறுவ

July 27, 2024 104 Views
பேச்சுப் போட்டியில் மதுரை மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை!
வேலுநாச்சியாரின் 295-வது பிறந்தநாள் விழா
இலவச கண் மற்றும் மருத்துவ சிகிச்சை முகாம்
156-வது பிறந்த நாளையொட்டி நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?