பொதுக்கூட்டத்தில்
ராஜா எம்எல்ஏ புகழாரம்/
தமிழ்நாட்டில் பல்வேறு சர்வதேச புகழ் மிக்க போட்டிகள் நடத்தியதன் மூலமாக நமது கலை,கலாச்சாரம் ஆகியவற்றை உலக அளவில் கொண்டு சேர்த்தவர் துணை முதல்வர் உதயநிதி
புளியங்குடி கேவிகே சாமி திடலில் நடைபெற்ற பிறந்த நாள் விழா பொது கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ராஜா தலைமை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர் யூஎஸ்டி சீனிவாசன், புளியங்குடி நகராட்சி சேர்மன் விஜயா சவுந்திரபாண்டியன், மாவட்ட பொருளாளர் சரவணன், மாவட்ட துணை செயலாளர்கள் மனோகரன், ,புனிதா, பொதுக்குழு உறுப்பினர் பத்திர சாகுல் ஹமீது, நகர பொருளாளர் காஜா மைதீன், துணை செயலாளர்கள் , கருப்பசாமி, ஆசைகனி, காந்திமதி அம்மாள், மாவட்ட பிரதிநிதிகள் சுரேஷ் , அருணாசலம், பெருமாள் மாரிசெல்வம் முன்னிலை வகித்தனர்.நகர செயலாளர் அந்தோணிசாமி வரவேற்றார். இளைஞரணி சார்பில் நடைபெற்ற பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற இளம் பேச்சாளர் வழக்கறிஞர் மோகநிதி கழக அரசின் சாதனைகளையும் சென்னை பேரிடர் காலத்தில் உதயநிதி ஸ்டாலின் தூங்காமல் மக்களை காத்த மாண்பை பற்றியும் எடுத்து கூறினார். தொடர்ந்து வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ பேசியதாவது, தமிழ் நாட்டில் செஸ் ஒலிம்பியாட் , பார்முலா கார் பந்தயம், அலை சறுக்கு போன்ற பல்வேறு போட்டிகளை நடத்தி நமது கலை கலாச்சாரம் பண்பாடு ஆகியவற்றை உலக அளவில் கொண்டு சேர்த்தவர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் எனவும், மேலும் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை, ஓய்வு பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வு ஊதியம் போன்றவற்றையும் வழங்கி தமிழ் நாட்டின் விளையாட்டு துறையை சர்வதேச அளவுக்கு உயரத்தி உள்ளார் என பேசினார். டாக்டர் செண்பக விநாயகம் சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலா சங்கர பாண்டியன் ஒன்றிய செயலாளர் வெள்ளத்துரை குணசேகரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் முடிவில் மாவட்ட ஓட்டுனர் அணி துணை அமைப்பாளர் அன்பு ராஜன் நன்றி கூறினார்.