டிச. 30
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் திருப்பூர் மாநகர் மாவட்ட சார்பாகவும் கொங்கு ரத்ததான மையம் சார்பாகவும் ரத்ததான முகாம் கண் சிகிச்சை முகாம் பொது மருத்துவ முகாம் இன்று குமார் நகர் கருப்பராயன் கோவில் மண்டபத்தில் முகாம்கள் தொடங்கப்பட்டது. இந்நிகழ்விற்கு மாநகர மாவட்ட செயலாளர் ரோபோ ரவிச்சந்திரன் தலைமையேற்று விழாவிற்கு முன்னிலையாக மாநகர மாவட்டத் தலைவர் சுரேஷ்குமார் மாநகர பொருளாளர் வேலுமணி மாநகர மாவட்ட துணைச் செயலாளர் தம்பி வெங்கடாசலம் ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் தேவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தினர் விழாவிற்கு வரவேற்புரையாக மாநகர இளைஞரணி செயலாளர் கொங்கு ரத்ததான நிர்வாகிகுமான மாடி கோயில் செல்வகுமார் வரவேற்புரை ஆற்றினார் இம்முகாமை மாநில பொதுச் செயலாளர்
இ .ஆர்.ஈஸ்வரன் அவர்களும் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் அவர்களும் துவக்கி வைத்தனர். மேலும் இவ்விழாவில் மாநில பொருளாளர் கே கே சி பாலு மாநில துணை பொது செயலாளர் சக்தி கோச் நடராஜ் குமரன் மருத்துவமனையில் நிர்வாக இயக்குனர் டாக்டர் செந்தில்குமார் சாந்தி சோஷியல் சர்வீஸ் மேலாளர் திரு சுரேஷ் அரசு மருத்துவமனை டாக்டர் முரளி கார்த்திக் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்வில் மண்டல செயலாளர் வேலுசாமி பொன்னுச்சாமி நல்லூர் கனகராஜ் ஒன்றிய செயலாளர் சிவலிங்கம் மற்றும் மாநகர மண்டல வார்டு ஒன்றிய நிர்வாகிகளும் மகளிர் அணியினரும் கலந்து கொண்டனர் இம் முகாமில் அரசு மருத்துவக் கல்லூரி ரத்த வங்கி ஸ்ரீ குமரன் மருத்துவமனை ஐ பவுண்டேஷன் ரோட்டரி ஐ எம் ஏ மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகள் கலந்து கொண்டனர்
முகாமில் 75 பேர் ரத்தம் கொடுத்து உள்ளார்கள் கன் சிகிச்சை முகாம் மற்றும் பொது மருத்துவ முகாம் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



