ஈரோடு டிச 21
முதல் அமைச்சர் மு க ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று ஈரோடு வந்தார். சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த அவர் பிறகு அங்கிருந்து கார் மூலம் ஈரோடு வந்தார். இதன் பிறகு நேற்று மாலை ஈரோடு தங்கம் மகாலில் நடந்த ஆய்வு கூட்டத்தில் மு க ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.
இதை தொடர்ந்து அவர் ஈரோடு சோலாரில் நடந்த அரசு விழாவில் கலந்து கொண்டார் .
இவ்விழாவில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் ரூ.951.20 கோடி மதிப்பீட்டில் 559 முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும், ரூ.133.66 கோடி மதிப்பீட்டில் 222 புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்,
மேலும் ரூ.284.2 கோடி மதிப்பீட்டில் 50,088 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
மொத்தம் 1369 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் 50 ஆயிரத்து 88 பேர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் பேசினார்.
விழாவில் அமைச்சர்கள் கே என் நேரு, சு முத்துசாமி, ப மு பெ சாமி நாதன், அன்பில் பொய்யாமொழி, மதிவேந்தன், காயல் விழி , ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.