கிருஷ்ணகிரி மாவட்டம். போச்சம்பள்ளி பகுதியை சேர்ந்த மனோகரன் மூத்த நிருபராக உள்ளார். கடந்த 2 தேதி பெய்த கனமழையால் இவரது வீட்டிற்குள் தண்ணீர் புகுந்து வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் அடித்து செல்லப்பட்டது. மேலும் வீட்டில் இருந்த பொருட்களும் தண்ணீரில் நனைந்து நாசமானது. இதையறிந்த தி.மு.க மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ நேரில் சென்று மூத்த நிருபர் மனோகரன் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினார். அதனை தொடர்ந்து வீடு கட்டுவதற்கு தேவையான உதவிகள் செய்வதாக தெரிவித்தார். அப்போது ஒன்றிய செயலாளர் சாந்த மூர்தி, மாவட்ட பொருளாளர் கதிரவன், முன்னாள் எம்எல்ஏ நரசிம்மன், இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் சரவணன். சங்கர், ராஜசேகர், மாணவர் அணி கெளதம், இலக்கிய அணி மதிகுமரன், தணிகைவேலன், காமராஜ், தெய்வம். வடிவேலன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



