ஊட்டி. டிச.12.
மத்திய அரசின் வரியினை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உதகையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றத்து.
நீலகிரி மாவட்ட உதகை மார்க்கெட் தபால் நிலையம் முன்பு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் பேரமைப்பின் மாவட்ட தலைவர் முகமது பரூக் தலைமையில் மத்திய அரசை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் கடைகளின் வாடகை மீதான 18% வரி விதிப்பை திரும்ப பெற வேண்டும், மாநில அரசு ஆண்டுதோறும் 6% கூடுதல் சொத்து வரி விதிப்பை திரும்ப பெற வேண்டும், வணிக உரிம கட்டண உயர்வு மற்றும் தொழில் வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும், குப்பை வரி மாநிலம் முழுவதும் ஒரே சீராக அறிவித்திட வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் உதகை, கூடலூர், பந்தலூர், கோத்தகிரி, குன்னூர் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் இருந்து வணிகர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.