கீழக்கரை செப் 11-
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகா இதம்பாடல் அருகே உள்ள பனையடியேந்தல் பகுதியைச் சேர்ந்தவர் முனியசாமி. இவரது மகன் ஜெயபால், (30). இவர் தனது டூவீலரில் நேற்று காலை ஊர் திரும்பினார். ஏர்வாடி வடக்கு தெருவை சேர்ந்த ஹக்கீம் சுல்தான் மகன் அப்துல் ஹலீம்,(17) இவர் ஏர்வாடியில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார் சின்ன ஏர்வாடியைச் சேர்ந்த ஷரீப் (15) ஆகியோர் டூவீலரில் சிக்கல் சென்று விட்டு ஏர்வாடி திரும்பினர்
சிக்கல் அருகே இதம்பாடல் பகுதியில் வந்த போது இரண்டு டூவீலரும் நேருக்கு நேர் மோதின. இதில் ஜெயபால், அப்துல் ஹலீம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த ஷரீப் ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக சிக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.



