அரியலூர், டிச;07
அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியத்தில் செந்துறை ஆனந்தவாடி மற்றும் சிறுகடம்பூர் ஆகிய கிராம ஊராட்சிகள் சார்பில் ஃபெஞ்சல் புயல் பாதித்த விழுப்புரம் மாவட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலமாக அனுப்புவதற்காக நிவாரண பொருட்கள் ஊராட்சி செயலர், தலைவர் தங்களால் முடிந்த பொருட்களை வழங்கினர். அரிசி , பருப்பு , சமையல் எண்ணெய், புலி , உப்பு பாக்கெட் உள்ளிட்ட நிவாரண தொகுப்பு பொருட்கள் சேகரித்து பார்சல் செய்து அனுப்புவதற்காக செந்துறை ஒன்றிய அலுவலகத்தில் தயார் நிலையில் இருந்தது இந்த பொருட்களை ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்ட மக்களுக்கு வழங்குவதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்புவதற்காக செந்துறை, ஆனந்தவாடி, சிறுகடம்பூர் ஆகிய பஞ்சாயத்து சார்பில் அனுப்ப தயார் செய்யப்பட்டது.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்