தஞ்சாவூர், செப். 2 –
தஞ்சாவூர் வட்டம் மாப்பிள்ளை நாயக்கன்பட்டி வல்லூண்டாம் பட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பட்டா மாறுதல், பிறப்பு, இறப்பு சான்று உள்ளிட்ட சான்றிதழ்களுக்கான ஆணைகளை நாடாளுமன்ற உறுப்பினர் ச. முரசொலி, திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை. சந்திரசேகரன் ஆகியோர் விண்ணப்பித்த பயனாளிகளுக்கு வழங்கினர்.
முகாமில் வல்லம் புதூர், சென்னம்பட்டி ஊராட்சி, நா.வல்லுண்டாம் பட்டு ஆகிய ஊராட்சியை சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்று மனுக்களை அளித்தனர். முகாமினை திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை. சந்திரசேகரன். வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா, வட்டாட்சியர் சிவக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணிகண்டன், சக்திவேல் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர்.
சிறு, குறு விவசாயிகள் சான்று, கணவரால் கைவிடப்பட்ட ஓர் சான்று காலதாமத பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், முதியோர் உதவித் தொகை, திருமணமாகாத பெண்கள் உதவித்தொகை போன்றவற்றிற்கு பொதுமக்கள் மனு அளித்தனர். தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி பங்கேற்று பட்டா மாறுதல் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு உடன் பட்டா மாறுதல் ஆணைகள் நூறு நாள் வேலை உறுதித் திட்டம் அட்டை, வாரிசு சான்றிதழ்களை விண்ணப்பித்தவர்களுக்கு உடன் வழங்கப்பட்டது. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் லாசர், சேவியர் ஊராட்சி செயலர்கள் ராஜாங்கம், ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் திட்ட முகாமினை ஒருங்கிணைத்திருந்தனர்.



