தருமபுரி டிச-1,
தருமபுரியில்
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட பேரவை கூட்டம் தருமபுரி முத்து நினைவு அறக்கட்டளை அலுவலகத்தில் நடைபெற்றது.
மாவட்டத்தலைவர் எஸ்.சபரிராஜன் தலைமைவகித்தார்.மாவட்டக்குழு உறுப்பினர் இ.மீரா சங்க கொடியேற்றி வைத்தார்.பிரவீன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார்.செ.குப்பன் வரவேற்றார்.மாநிலபொருளாளர் கே.பாரதி துவக்கிவைத்து பேசினார்.மாவட்ட செயலாளர் எம்.அருள்குமார் மாவட்ட பொருளாளர் எம்.சிலம்பரசன், ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிபேசினர்.
வாலிபர் சங்க முன்னாள் தலைவர்கள் தி.வ.தனுசன்,ஆ.ஜீவானந்தம்,இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்திபேசினர்.
மாவட்ட நிர்வாகிகள் பி.கோவிந்தசாமி , நேதாஜி,ராகப்பிரியா, வேலாயுதம்,சினேகா,அருள்அகியோர் தீர்மானத்தை முன்மொழிந்தனர்.மாநிலதுணைசெயலாளர் கே.ஆர்.பாலாஜி நிறைவுறையாற்றினர்.
மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
மாவட்ட தலைவராக குறளரசன்,மாவட்ட செயலாளராக எம்.அருள்குமார் மாவட்ட பொருளாளராக எம்.சிலம்பரசன்,துணைத்தலைவர்களாக மீரா குப்பன்,துணை செயலாளராக கோவிந்தசாமி,பிரவீன் உள்ளிட்ட 23 பேர் கொண்ட மாவட்டக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
தருமபுரியில் சிப்காட் அமைத்து உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை அளிக்க வேண்டும்.மத்திய அரசு பணியில் ரயில்வே உள்ளிட்ட ஓய்வு பெற்றவர்களே மீண்டும் பணி அமர்த்துவதை நிறுத்தி, மத்திய மாநில அரசு காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.காவிரி உபரிநீரை தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு நிரப்பும் திட்டத்தை துவக்க வேண்டும்.தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூடுதலாக மருத்துவர்கள் மற்றும்செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களை நிரப்பவேண்டும்.தருமபுரி -மொரப்பூர் இடையேயான ரயில் பாதை பணியினை விரைவுப்படுத்தவேண்டும்.
மேலும் பாலக்கோட்டில் தக்காளி குளிர்பதன கிடங்கு அமைக்கவேண்டும்.
பாப்பாரப்பட்டியில் வேளாண் உற்பத்தி பொருட்களின் மதிப்பு கூட்டு தொழிற்சாலை அமைக்கவேண்டும்.
பாப்பிரெட்டிப்பட்டியில் அரசு மகளிர் கல்லூரி மற்றும் மரவள்ளிக்கிழங்கு ஆலை அமைக்கவேண்டும். பொது மக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளை அப்புறப்படுத்த வேண்டும்.
அரூரில் சித்த மருத்துவ கல்லூரி மற்றும் மாலிப்டினம் தொழிற்சாலை அமைக்க வேண்டும்.பென்னாகரத்தில் அரசு தொழில்நுட்பக் கல்லூரி தொடங்க வேண்டும்.மாவட்டத்தில் அனைத்து பேரூராட்சிகளிலும் 100 நாள் வேலை திட்டத்தை அமுல்படுத்த வேண்டும்.
போதை பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தி, விற்பவர்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. மாவட்டக்குழு உறுப்பினர் குறளரசன் நன்றி கூறினார்.



